Sunday, December 3, 2023
Homeஇலங்கைதம்பியை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய தமயன்..!

தம்பியை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய தமயன்..!

- Advertisement -

ஹோமாகம பிரதேசத்தில் தனது இளைய சகோதரனை கொலை செய்வதற்காக அவரது மூத்த சகோதரர் 60 ஆயிரம் ரூபா கப்பம் வழங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்ட இளைய சகோதரன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தந்தை, மகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய தந்தை மற்றும் 21 வயதுடைய மகன் ஆவர்.

 

பெற்றோரின் சொத்துக்களை சமமாகப் பகிர்ந்தளிக்காமை காரணமாக இரு சகோதரர்களுக்கும் இடையிலான தகராறே சம்பவத்துக்கு காரணம் என தெரிய வருகிறது.

இளைய சகோதரர் ஹோமாகம ஹிரிபிட்டிய பிரதேசத்தில் பாடசாலை உபகரண விற்பனை நிலையமொன்றை நடத்தி வருகின்றார்.

 

இந் நிலையில் அவர் விற்பனை நிலையத்தில் இருக்கும்போது முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத மூவர் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

 

இதன்போது அருகில் இருந்த நபர் தாக்குதலை தடுக்க முற்பட்ட போது சந்தேக நபர்கள் அவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

 

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments