Monday, December 11, 2023
Homeஇலங்கைகனடா செல்ல முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

கனடா செல்ல முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

- Advertisement -

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக கனடா செல்ல முயன்ற நபரொருவர் நேற்று (20-11-2023) மாலை குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மில்லியன் ரூபா செலுத்தி தயார் செய்த போலியான கனடா விசாவுடன் குறித்த நபர் கனடா செல்ல முயற்சி செய்துள்ளார்.

கொழும்பை சேர்ந்த 34 வயதான பயணியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்றையதினம் டுபாய் ஊடாக கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

புறப்படும் முணையத்தில் இருந்த குடிவரவு அதிகாரி, பயணியின் கனேடிய விசாவின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகமடைந்து, அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையின் போது குறித்த நபர் அதிகாரிகளிடம் தனது கனேடிய விசாவைத் தயாரிப்பதற்காக முகவருக்கு இரண்டு மில்லியன் ரூபாய் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments