Friday, December 8, 2023
Homeஇலங்கைமுல்லை மண்ணில் அதிகரிக்கும் போதைப்பொருள் விற்பனை..!

முல்லை மண்ணில் அதிகரிக்கும் போதைப்பொருள் விற்பனை..!

- Advertisement -

முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

படவிளக்கம்

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருள்களை போட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார்கள்.

குறித்த இடத்திலிருந்து பொதி செய்யப்பட்ட வகையில் 4 கட்டு ஹெரோயினுடன் 10 மில்லி கிராமும், 4 கிராம் குடு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருட்கள் முள்ளியவளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,

சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments