கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் பஸ் ஒன்றும் சொகுசு வேன் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவி உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தேகொடை திசையில் இருந்து வந்த வேன், கொழும்பு நோக்கி திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது அதிவேகமாக பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தின் பின்னர் பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று கஹதுடுவ பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் வேனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும், பாடசாலை மாணவி ஒருவரும், பேருந்தில் பயணித்த மூன்று பெண்களும் காயமடைந்துள்ளனர்.
விபத்திற்குப் பிறகு, வேனில் சிக்கியிருந்த ஒருவர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டுள்ளார்.
வெத்தரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பலத்த காயமடைந்த வேனின் சாரதியும், வேனில் பயணித்த மேலும் ஒரு நபரும் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.