Friday, December 1, 2023
Homeஇலங்கைகோர விபத்து 6 பேருக்கு நேர்ந்த கதி..!

கோர விபத்து 6 பேருக்கு நேர்ந்த கதி..!

- Advertisement -

கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் பஸ் ஒன்றும் சொகுசு வேன் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவி உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தேகொடை திசையில் இருந்து வந்த வேன், கொழும்பு நோக்கி திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது அதிவேகமாக பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தின் பின்னர் பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று கஹதுடுவ பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் வேனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும், பாடசாலை மாணவி ஒருவரும், பேருந்தில் பயணித்த மூன்று பெண்களும் காயமடைந்துள்ளனர்.

விபத்திற்குப் பிறகு, வேனில் சிக்கியிருந்த ஒருவர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டுள்ளார்.

வெத்தரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பலத்த காயமடைந்த வேனின் சாரதியும், வேனில் பயணித்த மேலும் ஒரு நபரும் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments