- Advertisement -
தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து , நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
(12) ஞாயிற்றுக்கிழமை பண்டிகை காரணமாக பல தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், அதற்குப் பதிலாக நவம்பர் 18ஆம் திகதி (சனிக்கிழமை) பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
- Advertisement -