Saturday, December 2, 2023
Homeஇலங்கை3 பிள்ளைகளையும் கொலை செய்வேன்-ஆசிரியை மிரட்டிய விதானைக்கு நேர்ந்த கதி..!

3 பிள்ளைகளையும் கொலை செய்வேன்-ஆசிரியை மிரட்டிய விதானைக்கு நேர்ந்த கதி..!

- Advertisement -

ஹோமாகம பிட்டிபன, பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பிள்ளைகளைக் கொலை செய்யப் போவதாக  மிரட்டி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்ட கிராம சேவகரை இம்மாதம் 16  ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதிவான் பந்து லியனகே  உத்தரவிட்டுள்ளார்.

ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியைச் சேர்ந்த  கிராம சேவகர்  ஒருவரே இவ்வாறு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டி  20 இலட்சம் ரூபா கப்பம் வழங்காவிட்டால் மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவதாக அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்  ஹோமாகம தலைமையக பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்தே குறித்த   கிராம அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments