கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகியான நிரோஷா விராஜினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை நாளையதினம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான் கமல் விஜேசிறி உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதானவர் என மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் பலமுறை பாடகியின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட மாலபே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.