Saturday, December 2, 2023
Homeஇலங்கைஇலங்கை பிரபல பாடகியான சிங்கள அழகியின் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்..?

இலங்கை பிரபல பாடகியான சிங்கள அழகியின் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்..?

- Advertisement -

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகியான நிரோஷா விராஜினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை நாளையதினம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான் கமல் விஜேசிறி உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதானவர் என மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் பலமுறை பாடகியின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட மாலபே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments