Monday, December 11, 2023
Homeஇலங்கைகோர விபத்து-பெண் பலி..!

கோர விபத்து-பெண் பலி..!

- Advertisement -

வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து சம்பவம் புத்தளம் – சிலாபம் பிரதேசத்தில் அம்மன் கோயில் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுமார் 75 வயதுடைய 04 அடி உயரம் 06 அங்குலம் கொண்ட நீல நிற உடையணிந்த பெண் ஆவார்.

குருநாகல் பிரதேசத்தில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மற்றும் பெண் ஆகியோர் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவரது சடலம் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments