Monday, December 11, 2023
Homeஇலங்கைமலையகத்தில் மாயமான தமிழ் சிறுமி வவுனியாவில் மீட்பு..!

மலையகத்தில் மாயமான தமிழ் சிறுமி வவுனியாவில் மீட்பு..!

- Advertisement -

உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமி கடந்த சில தினங்களாக காணமற்போன நிலையில் இன்றையதினம் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாட்டிக்கு துணையாக இருந்த 14 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா  என்ற சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை (03) பகல் 11 மணியளவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடிய பின்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி புதன்கிழமை தந்தை, சிறுமியை கந்தப்பளை – பூப்பனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் சிறுமியின் பாட்டி வீட்டில் தீபாவளி பண்டிகை முடியும் வரை பாட்டிக்கு துணையாக அழைத்து வந்து விட்ட நிலையிலேயே காணாமற்போயுள்ளார்.

இதையடுத்து இன்றையதினம் வவுனியா – தவசிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments