Monday, December 11, 2023
Homeஇலங்கையாழில் சற்று முன் பதற்றம்..!

யாழில் சற்று முன் பதற்றம்..!

- Advertisement -

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மாவட்ட மேலதிக அரச அதிபர் ஊடாக மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments