சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்த இருவரை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று வருகைத் தந்துள்ளனர்.
பயண அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்கேகமடைந்த அதிகாரிகள் இருவரையும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
குறித்த நபர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்த அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்காக போலியான தகவல்களுடன் இரண்டு போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளனர்.
கைதான இருவரும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் மற்றும் 19 வயது யுவதி என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.