Friday, December 8, 2023
Homeஇலங்கைஅடங்காதா யாழ் வாசிகளின் வெளிநாட்டு மோகம்-19 வயது யுவதி உட்பட இருவருக்கு நேர்ந்த கதி..!

அடங்காதா யாழ் வாசிகளின் வெளிநாட்டு மோகம்-19 வயது யுவதி உட்பட இருவருக்கு நேர்ந்த கதி..!

- Advertisement -

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்த இருவரை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று வருகைத் தந்துள்ளனர்.

பயண அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்கேகமடைந்த அதிகாரிகள் இருவரையும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குறித்த நபர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்த அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்காக போலியான தகவல்களுடன் இரண்டு போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளனர்.

கைதான இருவரும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் மற்றும் 19 வயது யுவதி என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments