- Advertisement -
கடந்த திங்கள்கிழமை காலை, கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அஹேஜாஸ்கான் தனது ஆட்டோவில் வைத்திருந்த ஸ்க்ரூ ட்ரைவரால் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தை சம்பவம் தொடர்பாக தாய் மாமன்களிடம் கூறினர்.
என்ன ஆச்சோ ஏது அச்சோ என்ற அலறியடித்துக்கொண்டு வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் குரேஷாபானு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத அடுத்து தலைமறைவாக இருந்த அஹேஜாஸ்கானை கைது செய்துள்ளனர்.
- Advertisement -