Sunday, December 3, 2023
Homeஇலங்கை85 வயது தமிழ் மாமனாருக்கு வந்த ஆத்திரம்-மருமகளை துடிதுடிக்க வெட்டி சாய்த்த கொடூரம்..!

85 வயது தமிழ் மாமனாருக்கு வந்த ஆத்திரம்-மருமகளை துடிதுடிக்க வெட்டி சாய்த்த கொடூரம்..!

- Advertisement -

மூத்த மகன் ராஜேஷ் கண்ணனின் மனைவி பிரேமா(40) மாமனாரிடம் அடிக்கடி சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் மீண்டும் மருமகள் பிரேமா மாமனார் சண்முகவேலிடம் சொத்து கேட்டு பிரச்சனை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமனார் சண்முகவேல் வீடு புகுந்து மருமகள் பிரேமாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சொத்து பிரச்சனையில் மருமகளை கொலை செய்ததாக மாமனார் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த  வெள்ளத்தில் கிடந்த  பிரேமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments