கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மேலபெருவிளை என்ற ஊரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தங்ககனி. இவர்களுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரே மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இன்னும் இரண்டு பெண்கள் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பும், 10ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.
அதைப் பார்த்த தங்கை அக்காவிடம் மிச்சம் இருந்த பாதி சப்பாத்தியையாவது தனக்குத் தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால், அக்கா அதைக் கொடுக்க மறுத்து எஞ்சிய சப்பாத்தியையும் தானே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த 10ஆம் வகுப்பு சிறுமி கோபித்துக்கொண்டு வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டுவிட்டார்.
உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் திங்கட்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் இறந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அக்கா சப்பாத்தி கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டதால் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஊர்மக்கள் அனைவரையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.