Saturday, December 2, 2023
Homeஇந்தியாதமிழரின் கையில் இருந்த டிபன் Box திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தமிழரின் கையில் இருந்த டிபன் Box திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

- Advertisement -

சென்னை வில்லிவாக்கம் கணவன் மனைவி இடையே தகராறில் கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வில்லிவாக்கம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியோடு இருந்த நபரை பிடித்தனர். பின்னர் அவருடைய வீட்டில் சோதனை நடத்தியபோது வீட்டிலிருந்த டிபன் பாக்ஸ் ஒன்றை போலீசார் திறக்க முயன்றனர்.

 

அப்போது அதில் நாட்டு வெடிகுண்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை பிடிக்க முயன்ற போது போலீசார் பிடியில் இருந்து தப்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை போலீசார் மீண்டும் அதே வீட்டில் சோதனை செய்த பொழுது இரண்டு டிபன் பாக்ஸ்களில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார்  கைது செய்தனர்.

 

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி (27) என்பதும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தனது உயிருக்கு எதிரிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments