Monday, December 11, 2023
Homeஇந்தியாதிருமணத்தை மீறிய உறவால் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி..!

திருமணத்தை மீறிய உறவால் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி..!

- Advertisement -

திருமணத்தை மீறிய உறவால் இளைஞரை கொலை செய்தவழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன், அதே பகுதியைச் சேர்ந்த அரை சட்டைபாலாஜி என்பவர் திருமணத்தை மீறிய உறவு வைத்துள்ளார். தங்கராஜ் என்பவரும் அதே பெண்ணை விரும்பியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பாலாஜி, கடந்த 2021 ஜூலையில் தனது நண்பர்களான பிரேம்குமார், ஷியாம் பிரகாஷ், சங்கர், சங்கரின் மனைவி முனிஷா ஆகியோருடன் சேர்ந்து,தங்கராஜின் வீட்டுக்கு சென்று அவரைக் கத்தியால் குத்தி யுள்ளனர். இதில் படுகாயமடைந்த தங்கராஜ், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பாக நடந்தது. காவல்துறை தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோவிந்தராஜன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட பாலாஜி உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments