- Advertisement -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று இரவு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் அருகே, திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பேட்டை கூட்டு சாலையில் வந்த போது எதிரே வந்த கார் ஒன்று அரசு பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த டிஐஜி முத்துசாமி, ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும், செங்கம் உட்கோட்ட காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் 11 பேர் பயணம் செய்துள்ளனர்.
- Advertisement -