Wednesday, December 6, 2023
Homeஇந்தியாதாயை திட்டியதற்காக கொலை செய்த தமிழ் மகன்..!

தாயை திட்டியதற்காக கொலை செய்த தமிழ் மகன்..!

- Advertisement -

பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயை திட்டியதால் கொலை செய்ததாக அவர்கள் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவர் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த இடத்துக்கு 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களோடு வந்து பிரசாந்த்தை மட்டும் அழைத்து சென்று அடித்து, கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரசாந்த்தை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments