மோனிகாவை பார்ட்டியில் கலந்து கொள்ள சொல்லி அனுப்பியது யார் என்பதுதான் இங்கே இருக்கக்கூடிய ட்விஸ்ட்.
சிவகார்த்திகேயனின் ஆரம்பகட்ட திரைப்படங்களில் அவருடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியது டி இமான் தான். இவருடைய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் சிவகார்த்திகேயனை பிரபலப்படுத்தியது.
அதன் காரணமாகவே இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். அடிக்கடி இமானின் மியூசிக் ஸ்டுடியோவிற்கு செல்லும் சிவகார்த்திகேயன் அங்கே உருவாகி இருக்கும் பாடல்களை கேட்டு தனக்கு பிடித்த பாடல்களை தேர்வு செய்து தன்னுடைய படத்திற்கு புக் செய்திருக்கிறார்.
அந்த அளவுக்கு தன்னுடைய நெருக்கமாக பழகிய சிவ்கார்த்திகேயனை தன்னுடைய உடன்பிறந்த தம்பியாகவே பார்த்து பழகி வந்ததுள்ளார் இமான் என்று பலரும் கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் தான் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். அவருடன் இணைந்து இந்த ஜென்மத்தில் திரைப்படங்களில் பணியாற்ற மாட்டேன். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அவர் செய்த துரோகத்தை நான் வெளியே சொல்லாமல் இருக்கிறேன் என பேசி இருந்தார்.
இது மிகப்பெரிய அதிர்வல்களை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது தவிர தேய்ந்தபாடில்லை. காரணம், சிவகார்த்திகேயனும் இதற்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை.
இமான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதற்கு காரணமாக இருந்ததே சிவகார்த்திகேயன் தான் என்று பலரும் பேசி வருகின்றனர். இப்படி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் எதையும் வெளியே சொல்லாமல் மூடு மந்திரமாக அமைதியாக இருப்பது எதனால்..? என்று கேள்வி எழும்பி வருகிறது.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் பற்றி பேசி இருக்கிறார்.
இதில் சிவகார்த்திகேயன் ஒரு நைட் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நைட் பார்டியில் இமான் மனைவி மோனிகாவும் கலந்து கொண்டிருந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நைட் பார்ட்டியில் மோனிகா-வுக்கு என்ன வேலை..? அவரை அனுப்பியது யார் என்று நீங்கள் கேட்கலாம்.
அந்த இரவு நேர பாட்டிக்கு மோனிகாவை அனுப்பியது வேறு யாரும் அல்ல இசையமைப்பாளர் இமான் தான். அந்த பார்ட்டிக்கு இமானை தான் சிவகார்த்திகேயன் அழைத்தார்.
ஆனால், அந்த நேரத்தில் இமான் பிஸியாக இருந்த காரணத்தினால் தன்னால் வர முடியாது என்று கூறி மோனிகாவை அனுப்பி வைத்திருக்கிறார்.
சினிமாவில் இருக்கக்கூடிய ஒருவருக்கு நைட் பார்டியில் என்ன நடக்கும் என்பது தெரியாதா..? அப்படி தெரிந்தும் எதற்காக தன்னுடைய மனைவியை அனுப்ப வேண்டும்.
அந்த நைட் பார்ட்டிக்கு போன இமானின் மனைவி அங்கு காணாமல் போய்விட்டார். குதிரை ஓடிய பிறகு லாயம் போட்டு என்ன பிரயோஜனம் என்பது போலத்தான் இமான் இப்போது பேசி என்ன பிரயோஜனம் என தெரிவித்திருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன்.