Saturday, December 2, 2023
Homeஇந்தியாகாதல் விவகாரம் ஆள் மாறி படுகொலை..!

காதல் விவகாரம் ஆள் மாறி படுகொலை..!

- Advertisement -

மதுரையில் காதல் விவகாரத்தில் காதலியின் தந்தை என கருதி ஆளை மாற்றி முதியவரை கொன்ற சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை கரிமேட்டிலுள்ள யோகனந்தசுவாமி தெற்கு மடம், நல்லமாயன் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் பொங்குடி (65). இவர் தனது வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த இரண்டுபேர் அவரது மனைவி பாண்டியம்மாள் கண்முன் பொங்குடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

இது தொடர்பாக கரிமேடு போலீஸார் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் மதுரை காளவாசல் எச்எம்எஸ் காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முத்தமிழன் என்பவர் காதலியின் தந்தையை கொல்ல வந்தபோது, ஆள் மாற்றி பொங்குடியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தமிழன் (19), அவரது நண்பர் கோச்சடை சரவணப் பாண்டி மகன் அருணாச்சலம் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments