- Advertisement -
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் தோரிப்பள்ளி அருகேயுள்ளஉங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்வெங்கட்ராமப்பா (52). இவரது மனைவி மீனாட்சி(47), மகன் கிரி (23), மகள் காவ்யா (18).
கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி சூளகிரி அருகே நடந்த விபத்தில் சிக்கிய கிரி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செப். 7-ம்உயிரிழந்தார். இதனால் வேதனையடைந்த நிலையில் இருந்த மீனாட்சி மற்றும் காவ்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்து வந்த சூளகிரி போலீஸார் இருவரது உடல்களையும் மீட்க முயன்றனர். அதற்குமீனாட்சியின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கிரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மீனாட்சியும், காவ்யாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
- Advertisement -