- Advertisement -
திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அருகே காஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு (30). இவர், காஞ்சிபாடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை கத்தியை காட்டி கடத்தி, பூந்தமல்லி லாட்ஜ் ஒன்றில் 10 நாட்கள் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு, டில்லிபாபுவின் தந்தை ஏழுமலை (53) உடந்தையாக இருந்துள்ளார்.
இதுதொடர்பாக கனகம்மாசத்திரம் போலீஸார் டில்லிபாபு, ஏழுமலை ஆகியோர் மீது தனி தனியாக இரு வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகளின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
- Advertisement -