Thursday, December 7, 2023
Homeஇலங்கைஅலைபேசி அழைப்பை கேட்டு காட்டுக்குள் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

அலைபேசி அழைப்பை கேட்டு காட்டுக்குள் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

- Advertisement -

மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இந்த மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாதம்பே, பனிரெண்டாவ பிரதான வீதியில் உள்ள காட்டில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் இந்த மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த எலும்புகள் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments