Sunday, December 3, 2023
Homeஇலங்கைசற்றுமுன் கோர விபத்து- 7 வயது தமிழ் சிறுவன் பலி..!

சற்றுமுன் கோர விபத்து- 7 வயது தமிழ் சிறுவன் பலி..!

- Advertisement -

வாகன விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு – மகரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நீர்கொழும்பைச் சேர்ந்த லோகேஸ்வரன் சயந்தன் என்ற 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற உயிரிழந்த சிறுவனின் தந்தையான இராமச்சந்திரன் லோகேஸ்வரன் (வயது 38) படுகாயங்களுடன் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காரின் சாரதியான 27 வயதுடைய இளைஞர் சிறு காயங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் காரும் பலத்த சேதமடைந்துள்ளன.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments