- Advertisement -
புதிய காத்தான்குடி 2 ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் போதை வஸ்துக்கு அடிமையான நிலையில் தொடர் பாவனைக்கு பணமில்லாத காரணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டையே தீ வைத்து எரித்துள்ளார்.
இன்று (27/10/2023) அதிகாலை சுமார் 1.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.
தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -